26 நவம்பர், 2017

3.3 சீர் இலக்கணம்
    எழுத்து, அசை ஆகியவற்றை அடுத்து, செய்யுள் உறுப்புகளுள்
மூன்றாவதாக இருப்பது சீர். இது அசைகள் சேர்ந்து அமையும்
உறுப்பாகும். தனித்தனிச் சொல்போன்று செய்யுளில் காணப்படும்
உறுப்புத்தான் சீர் என்பது.

கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
    இத்திருக்குறளில் முதலடியில் நான்கு சீர்களும், அடுத்த
அடியில் மூன்று சீர்களும் உள்ளன. பொதுவாக எல்லாச்
செய்யுள்களிலும் சீர்கள் ஒவ்வொன்றும் இடம் விட்டுத் தனித் தனிச்
சொற்கள் போல அமைக்கப்பட்டிருக்கும். ஒரு சீரில் அசை
இரண்டோ அல்லது மூன்றோ பொதுவாக இடம் பெற்றிருக்கும்.
ஓர் அசை மட்டுமே அமைந்த சீர்களும் உண்டு. நான்கு
அசைகளையுடைய சீர்களும் உண்டு. இருப்பினும் இத்தகைய நான்கு
சீர்கள் அருகியே (எங்கோ ஓரிரு இடங்களில் மட்டும்)
செய்யுள்களில் காணப்படும்.

3.3.1 சீர் வகைகள்
    சீர்கள் நான்கு வகைப்படும். அவை :
1.
ஓரசைச் சீர்கள்
2.
ஈரசைச் சீர்கள்
3.
மூவசைச் சீர்கள்
4.
நாலசைச் சீர்கள் என்பனவாகும்.
    ஓரசைச்சீர் என்பது தனியாக ஒரு நேரசையோ அல்லது
நிரையசையோ சீராக அமைவதாகும்.

    ‘வா’ என்பது ஒரு நெடில். இதுவே, ‘வாடியது’ என்னும்
சொல்லில் ‘வா’ என ஓர் அசையாக உள்ளது. இதுவே வெண்பாவின்
(கடைசி) ஈற்றுச்சீராக வரும்போது,

    ‘எங்குமே தங்காமல் வா’
என அமையும். இந்த அடியில் ‘வா’ என்பது ஒரு சீராக
உள்ளது. ஆகவே, ஒரே எழுத்தே ஓர் இடத்தில் எழுத்தாகவும், ஓர்
இடத்தில் அசையாகவும், ஓர் இடத்தில் சீராகவும் வரும்.
இடத்திற்கேற்ப இது எவ்வாறு உள்ளது என அறிய வேண்டும்.

    நேர், நிரை என்னும் அசைகள் தனித்தனியே ஒரு சீராக வரும்
எனப் பார்த்தோம்.

    இவ்விரு அசைகளையும் கொண்டு வெவ்வேறு அமைப்பிலான
ஈரசைச் சீர்களை உருவாக்கலாம்.

நேர் நேர் நிரை நேர்
நிரை நிரை
நேர் நிரை 
எனும் இவை நான்கும் ஈரசைச் சீர் களாகும். இவற்றை
அடுத்து மூவசைச் சீர்கள் பற்றிக் காண்போம்.

    இந்த நான்கையும் அடிப்படையாகக் கொண்டு இவற்றின்
இறுதியில் நேர் என்பதையோ அல்லது நிரை என்பதையோ
சேர்த்தால் மூவசைச் சீர்கள் எட்டுக் கிடைக்கும். அவையாவன :

1.
நேர் நேர்+ நேர்
2.
நிரை நேர்+ நேர்
3.
நிரை நிரை+ நேர்
4.
நேர் நிரை+ நேர்
5.
நேர் நேர்+ நிரை
6.
நிரை நேர்+ நிரை
7.
நிரை நிரை+ நிரை
8.
நேர் நிரை+ நிரை
    இவ்வாறு மூவசைச்சீர்கள் எட்டுக் கிடைக்கும். இவற்றுள்
நேரசையை இறுதியில் கொண்ட சீர்கள் நான்கு, நிரையசையை இறுதியில் கொண்ட சீர்கள் நான்கு ஆகும்.

    மூவசைச் சீர்கள் எட்டின் இறுதியிலும் நேர் என்னும்
அசையைச் சேர்த்தால் எட்டு நாலசைச்சீர் கிடைக்கும். இது போல்
நிரை என்னும் அசையை இறுதியில் சேர்த்தால் எட்டு நாலசைச்சீர்
கிடைக்கும். இவையே பொதுச்சீர் எனப்படு்ம். இவற்றைப் பற்றி
மேல்வகுப்பில் விளக்கமாகப் படிக்கலாம்.

    இவ்வாறு, ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர்
எனச் சீர்கள் நான்கு வகைப்படும். மேலும், இவை ஓரசைச்சீர் 2,
ஈரசைச்சீர் 4, மூவசைச்சீர் 8, நாலசைச்சீர் 16 என ஆகி, சீர்கள்
முப்பது என உள்ளன என்பது நினைவிற்குரியது.

3.3.2 சீர் வாய்பாடுகள
    ஓரசை, ஈரசை மட்டும் உள்ள சீர்களை வேண்டுமானால்
எளிதில் நினைவிற் கொள்ளலாம். பிற சீர்களில் உள்ள அசைகளை
அவ்வளவு எளிதில் நினைவில் வைத்துக் கொள்வது இயலாது.
எனவே, யாப்பு இலக்கண ஆசிரியர்கள் அவற்றையும் நினைவில்
கொள்ள எளிய ஒரு முறையைக் கண்டறிந்தனர். அதற்கு ‘வாய்பாடு’
என்று பெயர். பல்லாயிரக் கணக்கான சொற்களில் ஒரு சீர் என்ன
அமைப்பில் உள்ளது என்பதை ‘வாய்பாடு’ என்பதன் வழி எளிதில்
சுட்டலாம். ஈரசைச்சீர்களுக்கான வாய்பாடுகளை முதலில் காண்போம்.

    ‘மாமா’, ‘நீ யார்’ என்பவற்றில் நேர் நேர் எனும் அசைகள் உள்ளன. இதனைத் ‘தேமா’ என்னும் வாய்பாடாகச் சுட்டியுள்ளனர்.
இதுபோல் பிற சீர் வகைகளுக்கான வாய்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன.

சீர்கள்
வாய்பாடு
சரியா, புதிதாபுளிமா (நிரை, நேர்)
எதுமுறை, திருமணம்கருவிளம் (நிரை, நிரை)
யாரிவன், கார்முகில்கூவிளம் (நேர், நிரை)
    மூவசைச் சீர்களுக்கான வாய்பாடுகள் காய், கனி என முடியக்
கூடியனவாய் உள்ளன. நேரசையில் முடிபவை ‘காய்’ என்னும்
சொல்லாலும், நிரையசையில் முடிபவை ‘கனி’ என்னும் சொல்லாலும்
முடிகின்றன.

சான்றுகள் :
சீர்கள்
வாய்பாடு
கோபாலா, நீவாடாதேமாங்காய் (நேர், நேர், நேர்)
விடையாகும், புரியாதாபுளிமாங்காய் (நிரை, நேர், நேர்)
அது சரிதான், அவள்
சிரித்தாள்
கருவிளங்காய் (நிரை, நிரை, நேர்)
ஏன் அழுதாய்,
நானறிவேன்
கூவிளங்காய் (நேர், நிரை, நேர்)
முன்மாதிரி, உன்
வீடெது?
தேமாங்கனி (நேர், நேர், நிரை)
அதுதான் சரி, சரியா
இது
புளிமாங்கனி (நிரை, நேர், நிரை)
மழைவரும் நேரம்,
அவளிடம்கொடு
கருவிளங்கனி (நிரை, நிரை, நிரை)
நீ வரும் இடம், உன்
விடை சரி
கூவிளங்கனி (நேர், நிரை, நிரை)
அசைச்சீர்களின் வாய்பாடுகள்
    ஓரசைச் சீர்களுக்கு நாள் (நேர்), மலர் (நிரை) எனும்
சொற்களை     வாய்பாடுகளாகச் சுட்டி     உள்ளனர். இவை,
குற்றியலுகரத்தில் முடிந்தால் காசுபிறப்புஎனும் வாய்பாடுகளைப்
பெறும்.

பொதுச்சீர்களின் வாய்பாடுகள்
    நாலசைச் சீர்களுக்கான வாய்பாடுகள் இருவகையான, ஒரே
முறையிலான     வாய்பாடுகளை     அடுத்தடுத்துச்     சேர்த்து
உருவாக்கப்படுகின்றன. ஈரசைச் சீர்களுக்கான வாய்பாடுகள் தேமா,
புளிமா, கருவிளம், கூவிளம் என்பதை முன்பே நீங்கள்
அறிந்துள்ளீர்கள். இவை,

    நேர் நேர், நிரை நேர், நிரை நிரை, நேர் நிரை என்பவற்றுக்கு
உரியவை. இவற்றுக்குப் பொருத்தமான இன்னொரு வகை
வாய்பாடுகளான

    தண் பூ, நறும் பூ, நறுநிழல், தண்ணிழல்

என்பவற்றை முன் பார்த்த தேமா, புளிமா முதலியவற்றோடு
சேர்த்தால் 16 நாலசைச்சீர்கள் வரும். இவை பற்றி நீங்கள்
மேல்வகுப்பில் விரிவாகப் படிக்கலாம்.

  • பாக்களுக்குரிய சீர்கள்
  • நேர் நேர்
    நிரை நேர்
    - (தே மா)
    - (புளி மா)
    மாச் சீர்கள் 2
    நிரை நிரை
    நேர் நிரை
    - (கரு விளம்)
    - (கூ விளம்)
    விளச் சீர்கள் 2
        என்னும் நான்கு சீர்களும் ஆசிரியப்பாவுக்கு உரியன.
    ஆசிரியப்பாவை இயற்பா என்றும் கூறுவர். எனவே, இச்சீர்களை
    இயற்சீர் என்றும் கூறலாம்.

        மூவசைச்சீரில் நேரசையை இறுதியில் கொண்ட சீர்கள் நான்கு,
    அவையாவன :
    நேர் நேர் நேர்(தே மாங் காய்)
    காய்ச் சீர்கள் 4
    நிரை நேர் நேர்(புளி மாங் காய்)
    நிரை நிரை நேர்(கரு விளங் காய்)
    நேர் நிரை நேர்(கூ விளங் காய்)
        இவை நான்கும் வெண்பாவுக்கு உரிய சீர்கள். எனவே,
    காய்ச்சீர்கள் நான்கும் வெண்பாவுக்கு உரியன என எளிதில்
    நினைவில் வைத்துக் கொள்ளலாம். வெண்பா உரிச்சீர்களாகிய
    இவற்றைப் போலவே நான்கு வஞ்சி உரிச்சீர்கள் உள்ளன.

    நேர் நேர் நிரை(தே மாங் கனி)
    கனிச் சீர்கள் 4
    நிரை நேர் நிரை(புளி மாங் கனி)
    நிரை நிரை நிரை(கரு விளங் கனி)
    நேர் நிரை நிரை(கூ விளங் கனி)
        நிரையை இறுதியில் கொண்ட மூவசைச்சீர்கள் நான்கு.
    இவற்றுக்குக் கனிச்சீர்கள் என்று பெயர். இவை நான்கும்
    வஞ்சிப்பாவுக்கு உரியன. எனவே இவற்றைவஞ்சி உரிச்சீர்
    என்றும் கூறலாம்.

        இவ்வாறு யாப்பு இலக்கணத்தில் மூன்று பாக்களுக்கு உரிய
    சீர்கள் குறிக்கப் பெற்றுள்ளன. கலிப்பாவுக்கு உரிய சீர் என்று
    எவையும் இல்லை. அப் பாவில் எல்லாச் சீர்களும் கலந்து வரும்.
    2.2 யாப்பு இலக்கண அறிமுகம்
    இலக்கியங்களை இயற்றும் போது இரண்டு வகையான ஊடகங்களில் இயற்றுவார்கள். அவற்றில் ஒன்று செய்யுள், மற்றது உரைநடை. பழைய காலத்தில் தமிழ் இலக்கியங்கள் யாவும் செய்யுளிலேயே இயற்றப்பட்டன. செய்யுளில் இயற்றப்பட்ட இலக்கியங்களுக்கும் இலக்கணங்களுக்கும் விளக்கம் கூறுவதற்கே உரைநடை பயன்படுத்தப்பட்டது. இலக்கியம் இயற்றப்பட்ட செய்யுள்களின் அமைப்புப் பற்றிப் படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும்.
    செய்யுள்களில் பல வகைகள் உள்ளன. செய்யுளின் முக்கியக் கூறாக இருப்பது ஓசை. வெவ்வேறு விதமான ஓசைகளை அடிப்படையாகக் கொண்டு பலவிதமான செய்யுள்கள் உருவாகியுள்ளன. பழைய காலத்தில் இருந்த முக்கியமான செய்யுள் வகைகள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவை ஆகும். இவற்றுடன் கலித்துறையும் பழைய காலத்தில் சிறப்பாக விளங்கியது. பக்தி இலக்கியமும் காப்பியங்களும் தோன்றிய காலத்தில் விருத்தம் என்ற செய்யுள் வகை பரவியது. பிற்காலத்தில் சிந்து, கும்மி முதலிய இசைப்பாடல் யாப்புகளிலும் செய்யுள்கள் இயற்றப்பட்டன. யாப்பு இலக்கணத்தில் செய்யுள் பற்றியும் செய்யுளின் உறுப்புகள் பற்றியும் கூறப்படும். அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை யாப்பு இலக்கணத்தின் உறுப்புகள் ஆகும். இந்த உறுப்புகளைப் பற்றியும் ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகிய பாக்களையும் அவற்றின் வகைகளையும் பற்றியும் படிப்பதே யாப்பு இலக்கணம் ஆகும்.
    அசை
    எழுத்துகள் சேர்ந்து அசையாக வருகின்றன. அசை நேர் அசை, நிரை அசை என்று இரண்டு வகைப்படும். ஒரு குறில் எழுத்து அல்லது நெடில் எழுத்து, தனியாகவோ மெய் எழுத்துடன் சேர்ந்தோ வருவது நேர் அசை எனப்படும்.
    -குறில் எழுத்து
    கல்-குறில் + மெய் எழுத்து
    கா-நெடில் எழுத்து
    கால்-நெடில் + மெய் எழுத்து
    குறில், நெடில் ஆகிய இரண்டும் தொடர்ந்து வருவதும் இரண்டு குறில் எழுத்துகள் தொடர்ந்து வருவதும் நிரை அசை ஆகும். இவற்றுக்குப் பின் மெய் எழுத்து வந்தாலும் நிரை அசை ஆகும்.
    கிளி-இரண்டு குறில் எழுத்துகள்
    மயில்-இரண்டு குறில் + மெய் எழுத்து
    புறா-குறில் நெடில் எழுத்துகள்
    இறால்-குறில் நெடில் +  மெய் எழுத்து
    மெய் எழுத்தைத் தவிர்த்துப் பார்த்தால் நிரை அசையில் இரண்டு எழுத்துகள் இருக்கும்.
    சீர்:
    அசைகள் இணைந்து வருவது சீர் ஆகும். ஒரே அசை சீராக இருப்பதும் உண்டு. இரண்டு, மூன்று, நான்கு அசைகள் சேர்ந்து சீராக அமைவதும் உண்டு. சீர்கள் பின்வருமாறு அமையும்:
    ஓர் அசைச் சீர்
    ஓர் அசை மட்டுமே வருவது ஓர் அசைச் சீர் ஆகும்.
    க, கல், கா, கால்-நேர் அசை
    கடு, கடல், பலா, வரால்-நிரை அசை
    ஈர் அசைச் சீர்
    இரண்டு அசைகள் சேர்ந்து வருவதுஈரசைச் சீர்ஆகும்.
    நேர் நேர் நிரை
    நேர் நேர் நிரை
    நிரை நிரை
    இவ்வாறு ஈர் அசைச் சீர்கள் நான்கு ஆகும்.
    மூவசைச் சீர்
    மூன்று அசைகள் சேர்ந்து வருவது மூவசைச் சீர் ஆகும்.
    நேர் நேர் நேர்
    நிரை நேர் நேர்
    நேர் நிரை நேர்
    நிரை நிரை நேர்
    நேர் நேர் நிரை
    நிரை நேர் நிரை
    நேர் நிரை நிரை
    நிரை நிரை நிரை
    நேர் அசையில் முடியும் மூவசைச் சீர்கள்நான்கும், நிரை அசையில் முடியும் மூவசைச் சீர்கள் நான்கும் ஆக மூவசைச் சீர்கள் எட்டு ஆகும்.
    நாலசைச் சீர்
    நான்கு அசைகள் சேர்ந்து வருவது நாலசைச் சீர்எனப்படும்.
    நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நேர் நிரை நிரை நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை நிரை நிரை நேர் நிரை நேர் நேர் நிரை நிரை நிரை நேர் நிரை நிரை நேர் நிரை நிரை நிரை நிரை நிரை நிரை நிரை
    நேர் அசையில் முடியும் நாலசைச் சீர் எட்டும், நிரை அசையில் முடியும் நாலசைச் சீர் எட்டும் ஆக நாலசைச் சீர்கள் பதினாறு ஆகும்.
    சீர்களைப் பற்றிக் கூறும்போது அவற்றை எளிமையாக நினைவில் வைக்கும் பொருட்டு அவற்றுக்கு வாய்பாடு கூறப்பட்டுள்ளது. சீர் வாய்பாடுகள் பின்வருமாறு அமையும்: ஓரசைச் சீர்களில் நேர் அசைவரும் சீர் நாள் என்றும், நிரை அசை வரும் சீர் மலர் என்றும் கூறப்படும்.
    ஈரசைச் சீர் வாய்பாடு பின்வருமாறு அமையும்.
    நேர் நேர்-தேமா
    நிரை நேர்-புளிமா
    நேர் நிரை-கூவிளம்
    நிரை நிரை-கருவிளம்
    நேர் ஈற்றுச் சீர்களை மாச்சீர் என்றும் நிரை ஈற்றுச் சீர்களை விளச்சீர் என்றும் கூறுவர். மூவசைச் சீர்களில் நேர் ஈற்றுச் சீர்களுக்கு மேற்கண்ட வாய்பாடுகளுடன் இறுதியில் காய்என்பதும் நிரை ஈற்றுச் சீர்களுக்கு இறுதியில் கனி என்பதும் வாய்பாடாக வரும்.
    நேர் நேர் நேர்தேமாங்காய்
    நிரை நேர் நேர்புளிமாங்காய்
    நேர் நிரை நேர்கூவிளங்காய்
    நிரை நிரை நேர்கருவிளங்காய்
    நேர் நேர் நிரைதேமாங்கனி
    நிரை நேர் நிரைபுளிமாங்கனி
    நேர் நிரை நிரைகூவிளங்கனி
    நிரை நிரை நிரைகருவிளங்கனி
    நாலசைச் சீர்களுக்கு வாய்பாடு கூறும்போது இறுதியில் நேர் வந்தால் தண் பூநறும் பூ என்றும் இறுதியில் நிரைவந்தால் தண்ணிழல்நறு நிழல் என்றும் வாய்பாடு கூறுவர்.
    நேர் நேர் நேர் நேர்தேமாந் தண்பூ
    நிரை நேர் நிரை நேர்புளிமா நறும்பூ
    நேர் நிரை நேர் நிரைகூவிளந் தண்ணிழல்
    நிரை நிரை நிரை நிரைகருவிள நறுநிழல்
    சீர்களை எளிதில் நினைவில் வைத்திருக்க உதவியாக இருக்கும் என்பதால் வாய்பாடு கூறப்படுகிறது.
    தளை
    இரண்டு சீர்கள் இணையும் விதம் தளை என்று கூறப்படுகிறது. தளை என்பதற்குக் கட்டு என்பது பொருள். சீர்கள் எவ்வாறு இணைந்து தளையாக வருகிறது என்பது கீழே காட்டப்படுகிறது.
    கற்கசடறக்கற்பவைகற்றபின்
    நேர்நேர்நிரைநிரைநேர்நிரைநேர்நிரை
    தேமாகருவிளம்கூவிளம்கூவிளம்
    இந்த அடியில் நான்கு சீர்கள் உள்ளன. நான்கு சீர்களுமேஈரசைச் சீர்கள் ஆகும். கற்கஎன்ற சீர் நேர் அசையில் முடிகிறது. இதற்குப் பின் வரும் கசடறக் என்ற சீரில் முதல் அசை நிரை அசையாக உள்ளது. நேர் அசைக்குப் பின் நிரை அசை வந்துள்ளது. இதற்குப் பின் வரும் கற்பவை என்ற சீரில் முதல் அசை நேர் அசையாக உள்ளது. கற்றபின் என்ற சீரிலும் முதல்அசை நேர் அசையாக உள்ளது. இந்த அடியில் நேர் அசைக்குப்பின் நிரை அசையும், நிரை அசைக்குப் பின் நேர் அசையும் வந்து தளை கொண்டுள்ளன. முரண்பட்ட இந்தத்தளைக்கு இயற்சீர் வெண்டளை என்று பெயர் ஆகும். இந்தத்தளை வெண்பாவில் மிகுதியும் வரும். இதேபோல வெவ்வேறு அமைப்புகளில் ஏழுவகைத் தளைகள் உள்ளன.
    அடி
    செய்யுளின் அடுத்த உறுப்பு அடிஎன்பதாகும். அடிஎன்பது செய்யுளில் இடம்பெறும் ஒரு வரியைக் குறிக்கும். பல அடிகள் சேர்ந்து ஒரு செய்யுளாக வரும். அடிகளே செய்யுளை வகைப்படுத்துவதில் முக்கிய இடம் வகிக்கின்றன. அடியில் வரும்சீரின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிகள் பல வகைப்படும்.
    இரண்டு சீர் அடி-குறள் அடி
    மூன்று சீர் அடி-சிந்து அடி
    நான்கு சீர் அடி-அளவு அடி
    ஐந்து சீர் அடி-நெடில் அடி
    ஆறு சீர் அடி-கழிநெடில் அடி
    ஆறு சீர்களுக்கு மேலும் ஓர் அடியில் வருவது உண்டு. அவையும் கழிநெடில் அடி என்றே கூறப்படும்.
    தொடை
    தொடுக்கப்படுவது தொடை எனப்படும். இரண்டு அடிகள் தொடர்ந்து வரும்போது அவற்றில் முதல் எழுத்து இரண்டாம் எழுத்து முதலியவை ஒத்து வரும்படி இருப்பது தொடை என்று கூறப்படும். முதல் எழுத்து ஒத்து வருவது மோனை எனப்படும். இரண்டாம் எழுத்து ஒத்து வருவது எதுகை எனப்படும்.
    செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை (திருக்குறள் -411)
    இந்தச் செய்யுளில் முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் முதல் எழுத்து செ என்றே வந்துள்ளது. இதுவே மோனைத் தொடை எனப்படும்.
    கற்க கசடறக் கற்பவை
    கற்றபின் நிற்க அதற்குத் தக (திருக்குறள்-391)
    இந்தச் செய்யுளில் இரண்டு அடிகளிலும் இரண்டாம் எழுத்தாக ற் என்ற மெய் எழுத்து வந்துள்ளது. இதுவே எதுகை எனப்படும். இவைபோலவே வேறுபல தொடைகளும் உள்ளன.
    பா
    பா என்பது செய்யுளின் வகை ஆகும். பாக்கள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப்படும். ஒவ்வொரு பாவிலும் வரும் சீர், தளை, அடி ஆகியவை கூறப்பட்டுள்ளன. நான்கு பாக்களுக்கும் தனித்தனி ஓசை உண்டு. ஓசையை அடிப்படையாகக் கொண்டே பாக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாவிலும் பல வகைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, வெண்பாவின் வகைகள் பின்வருமாறு.
    குறள் வெண்பா-இரண்டு அடிகள் கொண்டது.
    சிந்தியல் வெண்பா-மூன்று அடிகள் கொண்டது.
    இன்னிசை வெண்பா-நான்கு அடிகள் கொண்டது. (தனிச்சொல் வராது)
    நேரிசை வெண்பா-நான்கு அடிகள் கொண்டது. (தனிச்சொல் வரும்)
    பஃறொடை வெண்பா-ஐந்து அடிகளும் அதற்கு மேலும் வருவது.
    ஒவ்வொரு பாவிற்கும் தனி ஓசை உண்டு. வெண்பாவின் ஓசை செப்பல் ஓசை எப்படும். இவ்வாறே மற்ற பாக்களுக்கும் ஓசைகளும் வகைகளும் உள்ளன.
    பாவினம்
    பாவினம் என்பது பாக்களை ஒட்டி வருவதாகும். பாக்களின் ஓசையை ஒட்டி வருவதால் இவற்றைப் பாவினம் என்று கூறுகின்றனர். தாழிசை, துறை, விருத்தம்ஆகிய மூன்றும் பாவினம் என்று கூறப்படும். இந்தப் பாவினங்கள் நான்கு பாக்களுக்கும் உள்ளன. ஆசிரியப் பாவிற்குரிய பாவினங்கள் பின்வருமாறு.
    ஆசிரியத் துறை
    ஆசிரியத் தாழிசை
    ஆசிரிய விருத்தம்
    இந்தப் பாவினங்களுக்குத் தனியே இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. இதைப் போலவே மற்ற பாக்களுக்கும் பாவினங்கள் உள்ளன.
    2.2.1 பாட்டியல் இலக்கணம்
    இலக்கியங்கள் பலவகைப்படும். அவை பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி, உலா, தூது, பரணி, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு முதலியனவாகும். இவை பிற்காலத்தில் தோன்றிய இலக்கிய வகைகள் ஆகும். இத்தகைய இலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறுவது பாட்டியல் இலக்கணம் எனப்படும். பாட்டியல் நூல்கள் இலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுவதுடன் பொருத்த இலக்கணமும் கூறுகின்றன. செய்யுளில் அமைய வேண்டிய பொருத்தங்கள் பத்து என்று பாட்டியல்கள் கூறுகின்றன. ஒருநூலின் தொடக்கம் நன்றாக இருந்தால்தான் நூல் நன்றாக அமையும் என்பது அக்கால நம்பிக்கை. இந்த நம்பிக்கையை ஒட்டியே பொருத்தங்கள் அமைகின்றன.
    பொருத்தங்கள்
    1 மங்கலம் 2 எழுத்து 3 சொல் 4 தானம் 5 பால் 6 உண்டி 7 வருணம் 8 கதி 9 நாள் 10 கணம்
    எடுத்துக்காட்டாக செய்யுளின் முதல் சொல் மங்கலமாக இருக்க வேண்டும் என்பது மங்கலப் பொருத்தம் ஆகும். பாட்டியல் நூல்கள் இதை வற்புறுத்திக் கூறுகின்றன. மங்கலச் சொற்கள் இவை என்ற ஒரு பட்டியலும் பாட்டியல் நூல்களில் தரப்பட்டுள்ளன. சீர், உலகம், மணி, பொன், பூ, திங்கள், கடல், மலை முதலியன மங்கலச் சொற்கள் ஆகும். இவற்றை முதல் சொல்லாகக் கொண்டே நூல் இயற்ற வேண்டும் என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.

    23 நவம்பர், 2017

    ஆறாம் வகுப்பு படிக்கும் எனது மகளின்
    தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.
    அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.
    எனக்கு, அது தெரியாது என்பதால், அதை அவளிடமே  கேட்டேன்.
    உடனே அவள்.,
    “1 2 3 4 5 6 7 8 9 0
    என்ற எண்ணுக்கு
    முறையே,
    க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, ய′
    என்றாள்
    “இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன்.
    அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி தமிழ் ஆசிரியை சொல்லிக் கொடுத்ததாக கூறினாள்.
    அந்த வாக்கியம்..,

    “க’ டுகு,                    1

    “உ’ ளுந்து,               2

    “ங’ னைச்சு,.            3

     “ச’  மைச்சு,              4

    “ரு’ சிச்சு,                   5

    “சா’ ப்பிட்டேன்,.       6

    “எ’ ன, “.                     7

    அ’ வன்,                     8

    “கூ’ றினான்;           9

    “ய’  என்றேன்      0

    மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும்👏

    *தமிழை வளர்ப்போம்...*

    19 நவம்பர், 2017

    ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத்
    தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும்,
    வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.

    ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது
    இடைவெளியுடன் !

    மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -

    “ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள்
    காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம்
    ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”

    மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு
    தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.

    வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும்
    ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள்

    அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான
    வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி
    கீழே தன் கையெழுத்தையும் போட்டு,

    மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து
    அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்.

    மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று
    அமர்ந்து படிக்கிறார்கள்.

    10 நிமிடங்கள் – வகுப்பறையே
    சந்தோஷக்கடலில் மிதக்கிறது.

    “நான் இவ்வளவு சிறப்பானவனா..?
    என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல
    அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” –

    அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !

    அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
    குணாதிசயங்களை மேலும் மேலும்
    வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

    தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.
    பல வருடங்கள் கழிகின்றன.

    அந்த வகுப்பில் படித்த
    மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில்
    சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து,
    மரணம் அடைகிறான்.

    அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
    சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.

    இறுதிச் சடங்கில்,

    கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.

    மிடுக்கான ராணுவ உடையில் -
    நாட்டின் தேசியக்கொடு போர்த்தப்பட்டு,
    சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த
    மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.

    ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை
    செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.
    பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.

    உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள்
    அருகிலேயே நின்றிருந்தனர்.

    ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு
    டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.

    பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -
    எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி
    எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”

    சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத்
    தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.

    அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.

    அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -

    “டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.
    இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது
    பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.

    அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -
    பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.

    ஆமாம் – பல வருடங்களுக்கு
    முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல
    குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !

    கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -

    “ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன்
    உயிரையும்விட மேலாக விரும்பினான்.

    இத்தனை வருடங்களும்
    அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.

    அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும்,
    பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”

    டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து
    கதறி அழுகின்றனர்..,

    ஆம்,என் இனிய நண்பர்களே.,

    இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது.

    எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது,
    எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.

    இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
    அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.

    நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.

    ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
    நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
    அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.

    ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -
    அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
    தவறி விடுகிறோம்.

    கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத்
    தெரிவதில்லை.

    சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
    மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
    நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !

    பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !

    இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
    பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.

    கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !

    நீங்களோ, நானோ -
    யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.

    வெளிப்படையான பாராட்டுதல் -
    அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.

    நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.

    தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.

    மனிதர்களை மேலும் நல்லவர்களாக
    உருவாக்க இது உதவும். ..   துரைராஜ்,பழனி.
    கணினி மொழியின் அடிப்படை விதிகள் நம் தமிழ் மொழியில் இருந்துதான் தோன்றியது என்ற உண்மையை கண்டறிந்தேன் அதை உங்களோடு ஆதாரத்துடன் பகிர்ந்துகொள்வதில் தமிழன் என்று பெருமை கொள்கிறேன்

    விளக்கக் கட்டுரை:

    யாப்பு இலக்கண விதி சீரும்,  கணினி மொழியின் அடிப்படை விதி
    கீழேயுள்ள அட்டவனைப்படி ஒப்பீடு படித்தி பார்த்ததில் கணிமொழி அடிப்படை விதி நம் தமிழில் இருந்துதான் தோன்றியுள்ளது என்பதை
    கண்டறிந்தேன்.

    சான்றுகள்

    The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China, and India.

    பண்டைய எகிப்து, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பண்பாடுகளில் பைனரி எண்கள் தொடர்பான அமைப்புகள் முன்னர் தோன்றியுள்ளன என்றுஆங்கிலேயர்களே ஒப்புக்கொண்டுள்ளார்கள் ஆனால் அது சமஸ்கிரத்தில் இருந்துதான் தோன்றியது என்று சொல்வதைவிட  சமஸ்கிரதத்துக்கு மூத்த மொழியான நம் தமிழ் மொழியில் இருந்துதான் தோன்றியது என்று சொல்வதுதான் உண்மை தமிழனுக்கு பெருமை...நம் தமிழ் மொழியின் இத்தகைய சிறப்புகளை திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது என்று எனது இந்த ஆய்வின் மூலம் தெட்ட தெளிவாக தெறிகிறது.

    கணினி மொழி bainary number யாப்பு இலக்கண விதியில் இருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டது.
    Computer programme language fundamental table matching as per below comparison

    ஓர் அசைச் சீர் எ.கா single bit example
    நேர் ( 0 )
     நிரை  ( 1 )
    ஈரசைச் சீர் வாய்பாடு பின்வருமாறு அமையும்.
    • ஓரசைச்சீர்கள் . 1  bit binary .LOGIC NAME
    1. நேர் 0 LOW
    2. நிரை 1 HIGH
    • ஈரசைச்சீர்கள் . 2 bit binary .LOGIC NAME
    1. நேர்-நேர் 0-0 LOW-LOW
    2. நிரை-நேர் 1-0 HIGH-LOW
    3. நிரை-நிரை 1-1 HIGH-HIGH
    4. நேர்-நிரை 0-1 HIGH-LOW
    • மூவசைச்சீர்கள் . 3 bit binary logic name
    1. நேர்-நேர்-நேர் 0-0-0  LOW–LOW-LOW
    2. நேர்-நேர்-நிரை 0-0-1 LOW-LOW-HIGH
    3. நிரை-நேர்-நேர் 1-0-0 HIGH-LOW-LOW
    4. நிரை-நேர்-நிரை 1-0-1 HIGH-LOW-LOW
    5. நிரை-நிரை-நேர் 1-1-0 HIGH-LOW-LOW
    6. நிரை-நிரை-நிரை 1-1-1 HIGH-HIGH-HIGH
    7. நேர்-நிரை-நேர் 0-1-0 LOW-HIGH-LOW
    8. நேர்-நிரை-நிரை 0-1-1 LOW-HIGH-HIGH
    • நாலசைச்சீர்கள் . 4 bit binary logic name
    1. நேர்-நேர்-நேர்-நேர் 0-0-0-0 LOW-LOW-LOW-LOW
    2. நேர்-நேர்-நேர்-நிரை 0-0-0-1 LOW-LOW-LOW-HIGH
    3. நேர்-நேர்-நிரை-நேர் 0-0-1-0 LOW-LOW-HIGH-LOW
    4. நேர்-நேர்-நிரை-நிரை 0-0-1-1 LOW-LOW-HIGH-HIGH
    5. நிரை-நேர்-நேர்-நேர் 1-0-0-0 HIGH-LOW-LOW-LOW
    6. நிரை-நேர்-நேர்-நிரை 1-0-0-1 HIGH-LOW-LOW-HIGH
    7. நிரை-நேர்-நிரை-நேர் 1-0-1-0 HIGH-LOW-HIGH-LOW
    8. நிரை-நேர்-நிரை-நிரை 1-0-1-0 HIGH-LOW-HIGH-LOW
    9. நேர்-நிரை-நேர்-நேர் 0-1-0-0 LOW-HIGH-LOW-LOW
    10. நேர்-நிரை-நேர்-நிரை 1-0-1-0 HIGH-LOW-HIGH-LOW
    11. நேர்-நிரை-நிரை-நேர் 0-1-1-0 LOW-HIGH-HIGH-LOW
    12. நேர்-நிரை-நிரை-நிரை 0-1-1-1 LOW-HIGH-HIGH-HIGH
    13. நிரை-நிரை-நேர்-நேர் 1-1-0-0 HIGH-HIGH-LOW-LOW
    14. நிரை-நிரை-நேர்-நிரை 1-1-0-1 HIGH-HIGH-LOW-LOW
    15. நிரை-நிரை-நிரை-நேர் 1-1-1-0 HIGH-HIGH-HIGH-LOW
    16. நிரை-நிரை-நிரை-நிரை 1-1-1-1 HIGH-HIGH-HIGH-HIGH

    குறிப்பு: யாப்பு எப்போது தோன்றியது?
    தொல்காப்பியத்துக்குச் சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய யாபருங்கலமும், அதன் தொகுப்பாக அமைந்த யாப்பருங்கலக் காரிகையும் நேர்பு, நிரைபு என்னும் அசை-வாய்பாடுகளை விட்டுவிட்டு நேர், நிரை என்னும் இரண்டு வகை அசைநிலைகளை மட்டுமே காட்டுகின்றன.

    எனவே நண்பர்களே இனிமேல் தமிழ் மொழியில் இருந்ததுதான் கணினி மொழி தோன்றியது என்று நினைவில்கொள்வோம் நமது தமிழ் என்று பெருமைகொள்வோம்...!!!

    இந்த தொகுப்பின் ஆய்வாளர்,

    பி.மதியழகன்

    சிங்கப்பூர்.

    11 நவம்பர், 2017

    பணம் பணம் பணம் என்று அதை நோக்கியே நேர் வழியிலும் சரி, குறுக்கு வழியிலும் சரி செயல்படும் நண்பர்களுக்கு..

    உலகமே வியந்த, பொறாமைப்பட்ட, உச்சமான நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி 56 வயதில் உலகைப் பிரிவதற்கு முன்பாக விட்டுச் சென்ற செய்தியை அவரின் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப் படுத்திச் சொல்கிறேன்..

    "வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது.

    உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாரிக்க எத்தனைப் பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது.

    எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்துவிட்டால்? திரும்ப கிடைக்கவே கிடைக்காது.வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக்கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம்.

    நாம் பக்குவமடையும்போதுதான் சில விஷயங்கள் புரியும்.  முப்பது ரூபாய் கெடிகாரமும் சரி, மூன்று லட்சம் ரூபாய் கெடிகாரமும் சரி.. ஒரே நேரம்தான் காட்டும்.  செலவழிக்க வாய்ப்பு இல்லாதபோது உங்கள் மணிபர்சில் நூறு ரூபாய் இருந்தாலும் ஒன்றுதான். ஒரு கோடி இருந்தாலும் ஒன்றுதான். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசிப்பதும் 30,000 சதுர அடி பங்களாவில் வசிப்பதும் ஒன்றுதான்.

    ஆகவே..உங்களைச் சுற்றிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான குடும்பத்தினர் அனைவரிடமும் அன்புடன் பேசிப் பழகுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி. அது நீங்கள் வாங்கிய அல்லது வாங்க விரும்பும் எந்தப் பொருளிலும் இல்லை.

    பின் குறிப்பு:
    ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த போது அவர் விட்டுச் சென்ற சொத்துக்களின் மதிப்பு 2011ல் 10.2 பில்லியன் டாலர்ஸ்!( இந்திய மதிப்பில் அறுபத்து ஐந்தாயிரம் கோடிக்கு மேல்)


    நம் பள்ளிக் குழந்தைகளுக்கு
    "பணம் தேவை"
    அளவை எடுத்துக்கூறலாம்

    10 நவம்பர், 2017

    யாருக்கு விதி?!!
    எங்கே எப்படி முடியும்!!!

    📮இந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாகவளர்த்துவந்தாள்.

    ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.

    அதை பரிசோதித்த மருத்துவர்
    இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.

    உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,
    இந்த கிளியை எப்படியாவதுக்காப்பாற்றுங்கள்.
    கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.

    இந்திரன்,
    கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...
    ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?

    அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு
    பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..

    விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,

    இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை.

    உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்.

    நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு
    மஹாவிஷ்ணுவிடம்சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.

    மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான்.

    ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயிலிருக்கிறது.

    அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்.

    வாருங்கள் நானும் உங்களுடன்வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு.

    விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்.

    உயிர்களையெடுக்கும்பொறுப்பை நான்
    எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்.

    வாருங்கள் ....நாம் அனைவரும்சென்று எமதர்மனிடம்கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.

    தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார்.

    விஷயம் முழுவதையும்கேட்ட அவர் ,
    ஒவ்வொரு உயிரையும் எந்தநேரத்தில் ,
    எந்தசூழ்நிலையில் ,
    என்னகார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்.

    அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்.

    வாருங்கள் அந்த அறைக்குச்சென்று
    கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார்.

    இப்படியாக
    இந்திரன் ,பிரம்மா ,விஷ்ணு , சிவன் , எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.

    அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது.

    உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.

    அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.

    அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்....

    அதில்,,,

    இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ
    அப்போது இந்த கிளி இறந்துவிடும்.. என்று எழுதப்பட்டிருந்தது.

    இதுதான் விதி!!

    விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?!

    யாருக்கு விதி?!!
    எங்கே எப்படி முடியும்!!!
    என்பது எழுதினவனுக்கே
    தெரியாது என்பது தான் உண்மை?! 
    வாழும் காலம் நிரந்தரம் இல்லை?                   வாழும் காலத்திலாவது அனைவரிடமும் அன்பாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்!
    (படித்ததில் பிடித்தது)

    கேடு வெட்கக்கேடு

    த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...