8 மே, 2018

*விபூதி*
எந்தெந்த விரல்களால் *விபூதியை* தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.

*கட்டை விரல்*

கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

*ஆள் காட்டி விரல்*

ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.

*நடுவிரல்*

நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தா ல் நிம்மதியின்மை.

*மோதிர விரல்*

மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.

*சுண்டு விரல்*

சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.

*மோதிர விரல் – கட்டை விரல்*

மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்......*நகத்தை பற்களால் கடிக்க கூடாது.

*மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.

*தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.

*துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.

*நெருப்பை வாயினால் ஊதக்கூடாது.

*செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படிதிதி தோஷம் இல்லை.

*அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது. அத்துடன் துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும்.

*ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது. கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம். ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது
*தண்ணீரிலும்,எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது.
*இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்து உண்ணக்கூடாது.வெளிச்சத்தில் அமா்ந்தே உண்ணவேண்டும்.

*உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும்.

*ஈர ஆடையுடனும், தலைமுடியை அவிழ்த்துவிட்டும் உண்ணக்கூடாது.

*நெல்லிக்காய், இஞ்சி, தயிா், வறுத்தமா. இவற்றை இரவில் உண்ணக் கூடாது.

*உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது.

*கன்றுக்குட்டி,மாடு ஆகியவை கட்டியிருக்கும்கயிற்றை தாண்டக்கூடாது.

*பெண்கள் கண்ணீா்விடும் வீட்டில் செல்வம் தங்காது. அவா்கள் தலையை விாித்துப்போட்டிருப்பதும், இரு கைகளாலும் தலையை சொறிவதும் வறுமையை உண்டாக்கும்.

*தன்தாய், தந்தை பிணத்தை தவிர பிறபிணங்களை பிரம்மச்சாாி சுமந்து செல்லக்கூடாது.

*தன்மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் கணவன் அந்நியா் பிணத்தை சுமந்து செல்லக்கூடாது. ஆனால் தன்தாய், தந்தை, பிள்ளையில்லாத சகோதரன், பிள்ளையில்லாத மாமன் ஆகியோாின் பிணத்தை சுமக்கலாம்.

*தீட்டு உள்ளவா்கள் கட்டிலில் படுக்க கூடாது. தரையில் தான் படுக்க வேண்டும்.

*மாலைவெயில், ஓமப்புகை, தூயநீா்பருகுதல், இரவில் பாற்சோறு சாப்பிடுதல் என்பன ஆயுளைவிருத்தி செய்யும்.
*ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?*
அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
 *இதுவே தமிழின் சிறப்பு*

அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.

*உலகில் எந்த மொழியாலும் அசைக்க முடியாத நம் தமிழ்*

7 மே, 2018

நம்ம மாநிலத்துல
ஈவினிங் காலேஜ்
உருவான கதை தெரியுமா...?


நம்ம "பரமக்குடி சீனிவாசன்" அதாங்க நம்ம கமல்ஹாசனோட அப்பாவும், பெருந் தலைவர் காமராஜரும் நல்ல நண்பர்கள். ஒரு முறை அவர் முதலமைச்சரா இருந்தப்போ தலைவரைப் பார்க்க நம்ம சீனிவாசன் போயிருக்காரு, என்ன விஷயம்? னு பெருந்தலைவர் கேட்க, என் பையனுக்கு (சாருஹாசனுக்கு)மாநிலக் கல்லூரில BSC சீட் வேணும்னு தயங்கிக் கொண்டே சொல்ல, உன் பையனுக்கு சீட் வாங்கித் தரவா நான் இந்தப் பதவிக்கு வந்தேன்னு சொல்ல. "சீனிவாசன்" அவர்களுக்கு சங்கடமாப் போச்சாம்.

 கொஞ்சம் வருத்தத்தோட 15 சீட் தானாம், அதான் கிடைக்குமான்னு தெரியலன்னு போக முற்பட்டவரை நிறுத்தி, என்ன சொன்ன? வெறும் 15 சீட் தானா? ஏன்? இவ்வளவு குறைவான இடங்கள்?அந்த பிரின்சிபாலுக்கு போனைப் போடுன்னாராம்.

ஏன்பா வெறும் 15 சீட் காலேஜ்லன்னு கேட்க, யுனிவர்சிட்டி அவ்வளவு தான் அனுமதிக்குதுங்க நான் என்ன பண்ண முடியும்னு பிரின்ஸி சொல் , சரி யுனிவர்சிட்டிக்கு போன போடுன்னு சொல்லி அங்க கேட்க, அங்க லேப் வசதியில்லை, 15 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி என கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது, என்னால் எதுவும் செய்ய முடியாது எனக் கூற உடனே கல்வித்துறை மந்திரிக்குப் போன் பறக்கிறது. ஏன்? வெறும் 15 சீட், மற்ற குழந்தைகளும் படிக்க வேண்டாமா? நாடு எப்படி முன்னேறும் ? படிச்சாத்தானே முன்னேறும், இதைக் கூட்ட முடியாதா? எனக் கேட்க, கல்வி அமைச்சரும் "ஐயா அங்கு 15 மாணவர்களுக்கு மட்டுமே லேப் வசதி உண்டு, மேற்கொண்டு சேர்த்தால் வசதிப்படாதே எனக் கூற, "காமராஜர் " கூறினாராம் உங்க வீட்டுக்கு 30 பேர் விருந்தாளி வருகிறார்கள்? என்ன செய்வ ? 15 பேருக்கு சமைக்க மட்டுமே பாத்திரம் இருக்குன்னு வை? என்ன பண்ணுவ?முதலில் 15 பேருக்கு சமைச்சு வைச்சுட்டு, கழுவி அதே பாத்திரத்துல இன்னொரு முறை சமையல் செய்வ தானே.

அது போல இரண்டு ஷிப்ட் போடு, காலை, மாலை என, இன்னும் 15 பட்டதாரிகள் உருவாகட்டும்னு சொன்னாராம். கல்வி மந்திரியும் இந்த யோசனை எங்களுக்கு வரலீங்க ஐயா,இது வரை அமுல்படுத்துகிறோம்னு சொன்னாராம். அப்படி வந்தது தான் Evening காலேஜ். கல்வியில் ஆதவனாச்சே இவர்.

பிறகு அவர் சீனிவாசனைப் பார்த்து சொன்னாராம், சீட் இப்போ 30 ஆயாச்சு, உன் மகனுக்குத்  தகுதி இருந்தால் கிடைக்கும்னு சொல்லி விட்டு சென்று விட்டாராம்,அதனால தான் அவர் பெருந் தலைவர்னு அழைக்கப்பட்டார் போல.
 என்ன ஒரு மனிதரா வாழ்ந்திருக்கிறார்.

  எங்கே ஒருவன்
  இவன் போல் தலைவன்
  பதவி இருந்தால் மந்திரி  ஆவான்
  பதவி இழந்தால் மன்னன் ஆவான்னு வாலி சும்மாவா சொல்லியிருக்கிறாரு.வியக்க வைக்கும் மனிதர்கள்.

4 மே, 2018


வடக்குத் திசை குபேரனை வணங்கினால், செல்வ வளம் பெருகுமா?



பணமே வாழ்க்கையாகிவிடுவதில்லை. ஆனால், பணம் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை. கொஞ்சம் கசப்பாக இருந்தாலும், அதுதான் உண்மை. இந்தப் பணத்தைப் பெறத்தான் நாம் அல்லும் பகலும் அயராது பாடுபடுகின்றோம். ஆனாலும், எல்லோர் கைகளிலும் பணம் அத்தனை எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. பணம் தாராளமாக நம் கைகளில் புழங்க வேண்டுமானால், என்ன வகையான வாஸ்து மற்றும் பூஜை முறைகளைக் கையாள வேண்டுமென வாஸ்து சாஸ்திர நிபுணர் யோகஶ்ரீ எம்.எஸ்.ஆர். மணிபாரதியைக் கேட்டோம். அதற்கு அவர் கூறிய கருத்துக்களின் தொகுப்பு இதோ...
குபேர

'நம்முடைய சொந்தப் பணத்தைக் கொண்டு நாம் செய்யும் செயல்களும், பரீட்சார்த்தமான முயற்சிகளும், பயங்கரமாக மோதிக்கொள்ளும்யானைகளின் சண்டையை மலையின் உச்சியில் இருந்து பாதுகாப்பானது' என்கிறார் திருவள்ளுவர்.
கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருங்க அமையப்பெற்றவர்தான் சாதனையாளராக உயர முடியும் என்பது நிச்சயம்.
திருமகளோ தனக்கு முன்பாகச் செல்வத்தைக் கொட்டி வைத்திருக்கின்றாள். ஆனால், அவளுடைய அருளால் அதை நாம் எப்படிப் பெறுவது என்பதில்தான் நமக்குக் குழப்பம். இங்கேதான் நமக்கு வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது.
பணப்பெட்டி மற்றும் பீரோ வைக்கும் முறைகள்!
வடமேற்கில் பீரோ, பணப்பெட்டி முதலியவை இருந்தால், பணம் வருவதும், போவதுமாக இருப்பதுடன், சேமிக்க முடியாததுடன் கடன்காரனாகவும் மாற்றி துன்பப்பட வைக்கும்.
தென்கிழக்கில் பணப்பெட்டி இருக்குமேயானால், விரயச் செலவுகளையும், கொடுத்த பணம் திரும்பக் கிடைக்காத தன்மையையும் ஏற்படுத்தும். ஏமாற்றப்படுவார்கள்.
கிழக்கில் பீரோ இருக்குமாயின் பணம் பல வழிகளில் வந்தாலும், நோய்க்குச் செலவு செய்வதில் பெரும்பகுதியும், குழந்தைகளின் தவறான செயல்களினால் பெரும்தொகையுமாக வீண் செலவுகளை ஏற்படுத்தும். வீட்டில் கவலை குடிகொள்ளும்.
தெற்குப் பார்த்த வீட்டின் வடக்குச் சுவர் ஓரமாக, தெற்குப் பார்த்து பீரோ வைத்திருப்பவர்கள் வீட்டில், பெண்களுக்கு வைத்திய செலவை அதிகப்படுத்தும்.
லட்சுமி
மேற்குப் பார்த்த வீட்டுக்குக் கிழக்குச் சுவர் சார்ந்து, மேற்குப் பார்த்து பீரோ இருக்குமேயானால், ஆண்கள் தேவையற்ற வீண்செலவுகளைச் செய்வார்கள். ஆண்களுக்கு நோய்க்கான செலவுகள் அதிகரிக்கும்.
கிழக்குப் பார்த்து பீரோவை வைத்தால், மகிழ்ச்சியான செலவுகளைத் தந்து, நிம்மதியையும் லாபத்தையும் தரும். கண்டிப்பாக செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். மங்கள காரியங்கள் மனையில் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.
வீட்டின், தென்மேற்குச் சார்ந்த மூலை (நைருதி மூலை - குபேர மூலை என்று சொல்லப்படும்)யில் பீரோவை வைத்தால், பணம் கண்டிப்பாக எப்போதும் இருந்துகொண்டே இருப்பதுடன், பல தேவைகளைச் சிந்தித்து அதற்கேற்ப செலவுகளைச் செய்ய வைக்கும். குபேர மூலையில் பீரோவை வைக்கும் முன் குபேரனின் சிறப்புகளையும் பார்த்து விடுவோம்.
லட்சுமி
திருமகளான மகாலட்சுமிதான் செல்வத்துக்கு அதிபதி. குபேரன் செல்வத்தைப் பராமரிக்கும் பணியைத்தான் செய்கின்றார். எப்போதும் குபேரன் படத்துடன் மகாலட்சுமியின் படத்தையும் சேர்த்தே வணங்க வேண்டும்.
* வியாபாரத்தில், நாம் மேற்கொண்டுள்ள தொழிலில் லாபம் கிடைக்கவேண்டுமானால், குபேரனுக்குப் பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
திருவண்ணாமலையில் கிரிவலம்வரும் போது மறக்காமல் குபேரலிங்கத்தை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
* குபேரன் வடக்குத் திசைக்கு அதிபதி என்பதால்தான் வாழப் பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழியே உருவாயிற்று.
* குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும்.

எஸ்.கதிரேசன்


20 ஏப்ரல், 2018


சமயபுரம் மாரியம்மன் சித்திரைப் பெருவிழா

2018-04-20@ 09:40:48
சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயில், தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது சமயபுரம்.

கோயில் வரலாறு: 

திருக்கடையூரில் எமனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்த மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் சரணடைந்தார். ஈசனும் காலசம்கார மூர்த்தியாக அவதாரம் எடுத்து எமதர்மனை அழித்தார். இது உலகில் ஜனன மரணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நோய்களின் அதிபதியான மாயாசுரன் நோய்களைப் பரப்பினான். மக்களைத் துன்புறுத்தினான். இதைக் கண்டு கோபம் கொண்ட பார்வதி தேவி தன்வடிவமான மாரியம்மனை மாயாசுரனை வதம் செய்ய அனுப்பினாள். மாரியம்மன் மாயாசுரனையும், அவனது சகோதரர்களையும் வதம் செய்தாள். பின்னர் அவர்களின் தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றி அருள் புரிந்தார். பின்பு ஈசனின் அருளுடன் தனது தமையன் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் முதலில் வைஷ்ணவி தேவியாக அமர்ந்தாள். பின்னாளில் சமயபுரத்தில் வந்து மாரியம்மனாக வீற்றிருக்கிறாள்.

மாரியம்மன் தனது எட்டுக் கரங்களில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம், வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள். இடதுகாலை மடக்கி வைத்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் மாயாசுரனின்  தலைமீது கால் பதித்து,அமர்ந்து பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறாள். வேப்ப மர காட்டில் உருவான கோவில் என்பதால் தான் இப்போதும் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் தல விருட்சம் வேப்ப மரமாக உள்ளது.

கோயில் அமைப்பு: 

சமயபுரத்தாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக  280 அடி நீளத்துடனும் தெற்கு வடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிரகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. 2ம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.  இங்கு ஒரே சன்னதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங் களாக மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள்.

சித்திரை பெருவிழா: 

உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் நலனுக்காகவும் சிவபெருமானை வேண்டி மாசி கடைசி ஞாயிறு முதல், பங்குனி கடைசி ஞாயிறு வரை, 28 நாட்கள் சமயபுரம் மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். விரத நாட்களில் அம்மனுக்கு வழக்கமான தளிகைக்குப் பதிலாக துள்ளு மாவு, வெள்ளரிப் பிஞ்சு, பாசி பருப்பு, இளநீர் வகைகளே படைக்கப்படுகின்றன. அம்மன் விரதம் இருக்கும் நாட்களில் அம்மன் மனதை குளிர்ச்சி செய்யவே பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.

சித்திரை மாதத்தின் கத்திரி வெயிலில் அம்மை போன்ற நோய்கள் மக்களுக்கு ஏற்படும். அந்த வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு, மக்களை குளிர வைக்கும் அம்மன் உடல் வெப்பத்தை தணிக்கவே, பக்தர்கள் அம்பாளுக்கு பூமாரி பொழிந்து, அவளை குளிரச் செய்கிறார்கள். இத்தகைய சிறப்பு மிக்க பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று, படைத்தல், காத்தல், அழித்தல்,  மறைத்தல், அருள்பாலித்தால் என்ற ஐந்து தொழில்களையும் சித்திரைப் பெருவிழா நாட்களில் இங்கு அம்மன் அருள்புரிகிறார் என்பது ஐதீகம். சித்திரை திருநாளில் சமயபுரத்து மாரியம்மனை தரிசிக்கும் பக்தர்களுடைய அனைத்து வேண்டுதல்களையும் தேர்த்திருநாளன்று அருள்பாலிப்பால் எண்ணிய காரியம் இனிதே ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
VIDEO : பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் விசாரணை தொடக்கம் | Professor Nirmala Devi case
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் விசாரணை தொடக்கம் | Professor Nirmala Devi case
946 views
News

மேலும் செய்திகள்

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...